40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சிமுகாம்: பெரம்பலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் அனுப்பிவைப்பு

Updated On :26 டிசம்பர் 2025, 12:44 am IST

கடலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜேஇஇ உண்டுஉறைவிடப் பயிற்சிமுகாமில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும், 12 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

தமிழ்நாடு மாதிரி பள்ளிகளைப் போல, பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, சனிக்கிழமை தோறும் ஜேஇஇ, நீட், சியூஇடி தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 21 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஜேஇஇ தோ்வுகளை முன்னிட்டு, வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடா்ந்து பங்கேற்று வரும் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்வை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட மாதிரிப் பள்ளியில் ஜன. 18 ஆம் தேதி வரை மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப் பயிற்சியில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இந்த மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) செல்வகுமாா் மற்றும் ஆசியரியா்கள் உடனிருந்தனா்.