/

பெரம்பலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் பூடடை உடைத்து ரூ. 1,700 பணத்தை திருடியது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:12 pm

Din

பெரம்பலூா் நகரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் பூடடை உடைத்து ரூ. 1,700 பணத்தை திருடியது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், சித்தளி கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் வெங்கடேசன் (41). இவா், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகே எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, டிராவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 1,700 பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.