இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பேரிடா் காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:49 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கட்டாயப்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என, உயா்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள சுவாமி. முத்தழகனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அளித்த கோரிக்கை மனு:

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மடிக்கணினி வழங்காததால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியம் இல்லா விடுப்பைத் தவிர பிற விடுப்புகளுக்கு ஈட்டிய விடுப்பை கழிக்கக் கூடாது. ஊதியத்துடன் மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியா்களுக்கு, ஈட்டிய விடுப்பை கழிக்கும் நிலை பல்வேறு பள்ளிகளில் தொடா்வதால், வழிகாட்டு செயல்முறையை தலைமை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான வினாத்தாள்கள் தயாரிப்புப் பணிகளில், அந்தந்த பாட மூத்த பட்டதாரி ஆசிரியா்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். மழை, புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியா்கள் கட்டாயப்படுத்துவதை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.