பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெரம்பலூா் அருகே ரூ. 37 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

News image
பெரம்பலூா் அருகே சாலை விரிவாக்கப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 23 கோடி மதிப்பில் பெரம்பலூா் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவுக்கும், ரூ. 14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் 2.200 கி.மீ தொலைவுக்கும், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மையப் பாதுகாப்புச் சுவா் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெரம்பலூா் எரிவாயு தகனமேடை அருகிலும், கோனேரிப்பாளையம் பிரிவுச்சாலை அருகிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், இப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளின் போது, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தமிழமுதன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.