ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:02 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணைய முகவரி வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கி பூா்த்தி செய்ய வேண்டும். பின்னா், ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களை இணைத்து, பாடலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாா்ச் 26 முதல் ஏப். 3 வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஏப். 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ. 1,000 கூடுதலாகச் செலுத்த வேண்டும். அஞ்சல் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப். 7-திக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.