அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பேருந்து நிலையத்தில்  கழிவறை கட்டித்தர  நடவடிக்கை

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ரூ. 15 லட்சம் செலவில் கழிவறை கட்டித்தரப்படும் என்றார் தொகுதி எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:27 pm

DIN

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ரூ. 15 லட்சம் செலவில் கழிவறை கட்டித்தரப்படும் என்றார் தொகுதி எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம். 
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறை அமைத்துத் தரக்கோரி  அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து தொகுதி எம்எல்ஏ  நார்த்தாமலை பா. ஆறுமுகம், பேருந்து நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கி கழிப்பறை கட்ட உத்தரவிட்டார். மேலும் கந்தர்வகோட்டை காந்திசிலை பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 10 லட்சத்தில் பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைக்கவும் உத்தரவிட்டார்.  ஆய்வின்போது, கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் ஆர். ரெங்கராஜன், ஊராட்சிச் செயலாளர் அய்யா. செந்தில்குமார், நகரச் செயலாளர் என். ராமநாதன், குமார்,  கோவிந்தராஜ், எம். தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.