கந்தர்வகோட்டையில் தீத்தடுப்பு ஒத்திகை

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் முன்பாக கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக
Updated on
1 min read

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் முன்பாக கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மருத்துவர்கள்,  நோயாளிகள் முன்பாக விபத்தில்லாமல் தீயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும்,  விபத்தில் காயமடைந்தவர்களை எப்படி மீட்பது பற்றியும் விரிவாக செயல்விளக்கமளித்தனர். மேலும்,  தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,  மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com