காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோயாளிகளுக்கான ஊன தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் இ. அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். துணை இயக்குநர் (தொழுநோய்) சாமியப்பன் தொழுநோயாளிகளுக்கு ஊன தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துகள் வழங்கிப் பேசினார்.
முகாமில், தொழுநோயாளிகளுக்கு மூக்கு கண்ணாடி, காலணிகள், போர்வைகள், ரண சிகிச்சைக்கான மருத்துவ பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் டாமியன் பவுண்டேசன் சார்பில் கால் புண்கள் பராமரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள், நலக்கல்வியாளர்கள், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


