8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சரக்கு ஆட்டோ மோதி இளைஞர் சாவு

அன்னவாசல் அருகே சாலையோரத்தில் நின்ற இளைஞர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் உயிரிழந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

அன்னவாசல் அருகே சாலையோரத்தில் நின்ற இளைஞர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் உயிரிழந்தார். 
திண்டுக்கல் மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி மகன் வைரமணி (34). இவர் புதுக்கோட்டையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆக. 27 ஆம் தேதி அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் புதுகை செல்லும் வழியில்,  அன்னவாசல் அன்னை நகர் பிரிவு சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுள்ளார். அப்போது திருச்சி மாவட்டம் அயன்புதூரைச் சேர்ந்த அந்துவான் (45) ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ வைரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைரமணி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர்சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.