ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு

விராலிமலை அருகே அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோர் விராலிமலை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

Updated On :7 ஜூன் 2018, 8:48 am IST

விராலிமலை அருகே அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோர் விராலிமலை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
விராலிமலை வட்டம் ராஜாளிப்பட்டி, காரடைக்கம்பட்டி, ஒட்டன்காட்டுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 175-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 225 பேர் அருகேயுள்ள கவரபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது அரசு மதுபானக் கடை திறக்க கட்டப்படும் சாலை வழியாகத்தான் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. 
மதுக்கடை திறந்தால் மாணவ, மாணவிகள், பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மனஉளைச்சல் ஏற்படும். மேலும் அப்பகுதி வழியாக சென்று வரும் பெண்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. 
எனவே மதுகடை அமைக்க நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.