இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 3:08 am

DIN

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தார். 
தொடக்கமாக பொன்னமராவதி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் மேமணப்பட்டி முதல் கொல்லம்புஞ்சை வரையிலான சாலைப் பணி, அரசமலை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்திலான மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் கொட்டகைப்பணி, சாத்தனூரில் ரூ 1.96 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை கொட்டகை, தாய் திட்டத்தின் கீழ் ரூ. 17.40 லட்சத்தில் அமைக்கப்படும் செட்டிக்குளம் மேம்படுத்துதல் பணி என மொத்தம் ரூ. 40.36 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது மண்புழு இயற்கை உரங்களை அதிகளவு தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கவும், சாலைப் பணிகளில் தரமான பொருள்களை உபயோகிக்கவும், குளங்களை முறையாகச் சீரமைக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருள்களை கொண்டு கட்டி முடிக்கவும் அறிவுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதியழகன், ஜெயந்திதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.