4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

டிஎன்பிஎஸ்சி பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.

Updated On :21 மே 2018, 1:51 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு மன்னர்  கல்லூரி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தேர்வு எழுத 1,032 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 767 பேர் எழுதினர். 265 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக கோட்டாட்சியர் நிலையில் உள்ள இரு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் வட்டாட்சியர் நிலையில் 4 அலுவலர்கள், பறக்கும் படையில் 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.