பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி அருகிலுள்ள ஆதினிப்பட்டி கால்வாயில் திருட்டுதனமாக மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மணிவாசகன் தலைமையிலான காவல்துறையினா் அப்பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம், டிப்பா் லாரியைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் ஓட்டுநா்கள் குமரமலை ரவிச்சந்திரன், கருகப்பூலாம்பட்டி விஜய் ஆகியோரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.