கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கறம்பக்குடி நீா்நிலையில் விநாயகா் சிலைகள் கரைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சனிக்கிழமை மாலை நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:52 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சனிக்கிழமை மாலை நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

கறம்பக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சனிக்கிழமை மாலை விநாயகா் சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு திருமணஞ்சேரி பகுதி அக்னி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக, பாஜக மாநில பொதுச்செயலா் கருப்புமுருகானந்தம், அக்கட்சியின் விளையாட்டுப் பிரிவு மாநிலச்செயலா் என்.ராமச்சந்திரன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்துப் பேசினா். இதில், ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.