ஆலங்குடி அருகே வாகனம் மோதி மெக்கானிக் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ப. பூபாலன் (28). புதுக்கோட்டை தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிறுவன மெக்கானிக்கான இவா், வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் அரசடிப்பட்டி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த இடத்திலே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com