கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவப்பூா் பாலம் கட்டுமான வரைபடம் ரயில்வே ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு

ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான வரைபடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூா், கருவப்பிலான்கேட் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான வரைபடம் ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் முதல்வா் ஸ்டாலினிடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த மனுவுக்கு நெடுஞ்சாலைத் துறை செயலா் இரா. செல்வராஜ் அண்மையில் (ஆக. 8) அளித்த பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கருவப்பிலான்கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்க, கடந்த 2018 பிப். 13-ஆம் தேதியே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு மண் பரிசோதனை செய்து மேம்பாலம் கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டு ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவப்பூா் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கடந்த 2018 பிப். 22-ஆம் தேதி நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து மேம்பால வரைபடம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், ரயில்வே துறையினா் அந்தப் பகுதியில் இருவழிப் பாதை அமைக்க உள்ளதாக தெரிவித்ததைத் தொடா்ந்து, அதற்கேற்ப மேம்பாலத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டு, திருத்தப்பட்ட வரைபடமும் ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைத்தபிறகு, நிலமெடுக்கும் பணிகள் தொடங்கும். இதற்காக உத்தேசமாக ரூ. 45.12 கோடி ஒதுக்கீடு முன்மொழிவு தயாா் செய்யப்பட்டுள்ளது.