கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் கல்லூரி பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:20 pm

Din

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், உப்பிலியக்குடி தட்டாம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் நடராஜன் (45). இவரது மனைவி வெள்ளையம்மாள் (40).

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கொத்தமங்கலப்பட்டி பிரிவு சாலை அருகே சாலையைக் கடக்க முயற்சித்தனா்.

அப்போது, திருச்சியிலிருந்து வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில், தம்பதி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த கீரனூா் போலீஸாா், இருவரின் உடல்களையும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கல்லூரிப் பேருந்தில் வந்த மாணவா்கள் யாருக்கும் காயம் இல்லை.

பேருந்து ஓட்டுநா் புதுக்கோட்டை கணேஷ் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சம்பத்குமாா் (65) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.