மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

631 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

திருமயம் ஒன்றியப் பகுதிகளில் 631 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image

குழிபிறையில் மு.சி.த. ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி

Updated On :10 அக்டோபர் 2024, 8:03 pm

Din

திருமயம் ஒன்றியப் பகுதிகளில் 631 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த மிதிவண்டிகளை வழங்கினாா். குழிபிறை மு.சி.த. ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி, கோனாப்பட்டு ஸ்ரீ சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும், கோனாப்பட்டு ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும் அமைச்சா் எஸ். ரகுபதி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) ஜெயராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.