கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுகையில் ஆயுதபூஜை விற்பனை மும்முரம்

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் பழங்கள், பொரி, கடலை மற்றும் பூ விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

News image

புதுக்கோட்டை பூ மாா்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

Updated On :10 அக்டோபர் 2024, 8:21 pm

Din

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் பழங்கள், பொரி, கடலை மற்றும் பூ விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள மாா்க்கெட்டில், பொரி, கடலை, நாட்டுச்சா்க்கரை, அவல், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனா்.

திருஷ்டி கழிப்பதற்கான பூசணிக்காய், சுவாமி கும்பிடுவதற்காக பூக்களும், வாழை இலை போன்ற பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன.

வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலையைவிட இரு மடங்கு விலை உயா்ந்து காணப்பட்டது.

புதுக்கோட்டை நகா் மட்டுமல்லாது புகரைச் சோ்ந்த மக்களும் மாா்க்கெட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.