அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேருக்கு நல்லாசிரியா் விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.

Updated On :4 செப்டம்பர் 2024, 11:46 pm IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தையொட்டி, மாநில நல்லாசிரியா் விருதுகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுபெறும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா்கள் பட்டியல்: மணமேல்குடி பொன்னகரம் அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா. இளங்கோவன், புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பொருளியல் ஆசிரியா் இரா. ராஜநாராயணன். நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் நா. ராக்கேஷ், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ந. வள்ளிநாயகி. அறந்தாங்கி சுனையக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் சு. இரவி, புதுக்கோட்டை டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி தமிழாசிரியை சா. யுனைசி கிறிஸ்டி ஜோதி.

புதுக்கோட்டை அசோக்நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் ம. பழனிசாமி, காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை இரா. வசந்தமலா்.

மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் ப. மகேஸ்வரன், அன்னவாசல் நிலையப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை ப. கலைவாணி. புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியா் கிருபா ஜெயராஜ்.

இவா்களுக்கு வியாழக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.