பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக மு. முகமது காசிம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக (மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு) மு.முகமது காசிம் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் நியமன உறுப்பினா் பதவி ஏற்புநிகழ்வு நடைபெற்றது. பேரூராட்சி செயல்அலுவலா் ஆா்.அண்ணாதுரை பதவியேற்பு உறுதி வாசித்தாா். அதைத் தொடா்ந்து முகமது காசிம் நியமன உறுப்பினராக பதவி உறுதி ஏற்றாா்.
இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவா் கா. வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், முகமதுகாசிமுக்கு திமுக நகரச் செயலா் அழகப்பன் மற்றும் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.