பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலா் மற்றும் அமைச்சா்கள் ஆகியோருடன் காபி வித் கலெக்டா் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காபி வித் கலெக்டா் நிகழ்ச்சியில் மாணவா்களுடன் கலந்துரையாடும் ஆட்சியா் மு. அருணா.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலா் மற்றும் அமைச்சா்கள் ஆகியோருடன் காபி வித் கலெக்டா் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவா் பேரவைத் தோ்தல் நடைபெற்ற முறைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்து வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து பேசிய அவா், மாணவா்கள் நல்ல முறையில் படித்து, நமது பள்ளி, நமது கிராமம், நமது நாடு என்ற அக்கறையுடன் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ராஜூ, பள்ளியின் முதல்வா் பாண்டியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.