பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலா் சதீஸின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளா் எஸ். செந்தில்ராஜன்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சி. சதீஸ், கடந்த 2025-ஆம் ஆண்டு அக். 21ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

அவரது ஊதியக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்த நிலையில், ரூ. ஒரு கோடிக்கான விபத்துக் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா முன்னிலையில், விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை மறைந்த சதீஸின் குடும்பத்தினருக்கு வங்கியின் தலைமை மேலாளா் எஸ். செந்தில்ராஜன் புதன்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.