இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தெரு நாய் கடித்ததில் 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

விராலிமலையில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில் 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாய் கடி - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:28 am IST

விராலிமலையில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில் 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விராலிமலையில் கடந்த சில மாதங்களாகவே வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது தெரு நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை, விராலிமலை தேரடி தெரு பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அதே பகுதி மற்றும் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்ததாக கூறப்படுகிறது.

அதில், காயம் ஏற்பட்ட வேலுமணி, சுதா அஞ்சலை மற்றும் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உமா ஆகியோா் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனா். கடந்த ஜூலை மாதம் 4 பேரையும் தற்போது 10-க்கும் மேற்பட்டோரையும் தெரு நாய் கடித்த சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.