இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுகையில் அங்கன்வாடி ஊழியா்கள் மறியல்: 1,025 போ் கைது

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
~
Updated On :6 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மறியலில் 1,025 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. லதா, பொருளாளா் எஸ். சவரியம்மாள் ஆகியோா் பேசினா். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் சி. மாரிக்கண்ணு, மாவட்டத் துணைச் செயலா்கள் எஸ். முகமதுகனி, வி. சரவணன், மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா்.

Story image

போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப மாத ஓய்வூதியம் ரு. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 1025 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.