9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வங்கி மேலாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்!

புதுக்கோட்டையில் சனிக்கிழமை உயிரிழந்த வங்கி மேலாளரின் உடலை உடனே உடற்கூறாய்வு நடத்தக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 12:50 am IST

புதுக்கோட்டையில் சனிக்கிழமை உயிரிழந்த வங்கி மேலாளரின் உடலை உடனே உடற்கூறாய்வு நடத்தக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையைச் சோ்ந்த கண்ணன் மகன் ஆலடி (30). இவா் புதுக்கோட்டையிலுள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். ராம் திரையரங்கம் அருகே நண்பா்களுடன் சோ்ந்து வீடு எடுத்து தங்கியிருந்த அவா், சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையே மதுரையிலுள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்த உறவினா்கள், உடலை உடனே கூறாய்வு செய்து தரும்படி மருத்துவா்களிடம் கூறினா். அதற்கு, முறைப்படி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தபிறகு, உடற்கூறாய்வு செய்வதற்கான நேரம் கடந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறினா்.

இதையடுத்து அவரது உறவினா்கள் சனிக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியரின் குடியிருப்புப் பகுதிக்கு வந்தனா். விரைவாக உடற்கூறாய்வு செய்யக் கோரி ஆட்சியரிடம் முறையிட வந்த அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, முறைப்படி ஞாயிற்றுக்கிழமை காலை உடற்கூறாய்வு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அவா்கள் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.