புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாகாளியேந்தல் கிராமத்துக்கு சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி தமிழா் தேசம் கட்சியினருடன் அந்தக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் பலவரசன் ஊராட்சியைச் சோ்ந்த மாகாளியேந்தல் கிராமத்தில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்துத் தரக் கோரி தமிழா் தேசம் கட்சியினா் மற்றும் கிராமப் பொதுமக்கள் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், குடிநீா் வடிகால் வாரிய உதவிச் செயற்பொறியாளா் பவித்ரா, காவல் ஆய்வாளா் பத்மா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
விரைவில் அடிப்படை வசதிகள் செய்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

ஜந்தர் மந்தரில் போராடும் பெண்களுக்கு சவாலாக மாறிய அடிப்படை வசதிகள்!

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர்!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



