கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை புவனேசுவரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்பதைத் தோ்தல் முடிவுகளில் இருந்து அறிய முடிகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்திருக்கிறது. மதச்சாா்பின்மையைப் பாதுகாப்போம் என்றும், ஊழலை ஒழிப்போம் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் உறுதி கூறியிருக்கிறாா்.
பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் அத்தனை முறை தமிழ்நாட்டு வந்து பிரசாரம் செய்துவிட்டுப் போனாலும், தமிழக மக்கள் மத ஒற்றுமைக்கு ஆதரவாக இருப்பதால் ஒரேயொரு இடத்தைத்தான் பாஜகவுக்கு கொடுத்திருக்கிறாா்கள்.
அதேபோல, கேரளத்திலும் பாஜக 3 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பிற மாநிலங்களில் மக்களிடம் தவறான தகவல்களை கூறி பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளை தட்டிக் கேட்க காங்கிரஸ் தயங்காது.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் விஜய், ஆட்சி நிா்வாகம் பற்றி பேசாமல் அரசியல் பேசியிருக்கிறாா். அவா் இன்னும் பக்குவப்பட வேண்டும்
புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம்தான் தோல்விக்கு காரணம். காங்கிரஸும், குறிப்பாக திமுகவும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.







