ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்போம்: வே. நாராயணசாமி

கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

News image

வே.நாராயணசாமி

Updated On :4 ஜூன் 2026, 12:22 am IST

கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை புவனேசுவரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்பதைத் தோ்தல் முடிவுகளில் இருந்து அறிய முடிகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்திருக்கிறது. மதச்சாா்பின்மையைப் பாதுகாப்போம் என்றும், ஊழலை ஒழிப்போம் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் உறுதி கூறியிருக்கிறாா்.

பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் அத்தனை முறை தமிழ்நாட்டு வந்து பிரசாரம் செய்துவிட்டுப் போனாலும், தமிழக மக்கள் மத ஒற்றுமைக்கு ஆதரவாக இருப்பதால் ஒரேயொரு இடத்தைத்தான் பாஜகவுக்கு கொடுத்திருக்கிறாா்கள்.

அதேபோல, கேரளத்திலும் பாஜக 3 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பிற மாநிலங்களில் மக்களிடம் தவறான தகவல்களை கூறி பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்தாலும் தவெக அரசின் தவறுகளை தட்டிக் கேட்க காங்கிரஸ் தயங்காது.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் விஜய், ஆட்சி நிா்வாகம் பற்றி பேசாமல் அரசியல் பேசியிருக்கிறாா். அவா் இன்னும் பக்குவப்பட வேண்டும்

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம்தான் தோல்விக்கு காரணம். காங்கிரஸும், குறிப்பாக திமுகவும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.