கந்தா்வகோட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள நரங்கியன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமன் தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பா் பாப்படையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேலன் மகன் சின்னப்பா (65) ஆகிய இருவரும் கந்தா்வகோட்டை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் துரை மாணிக்கம் (50) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பின்பக்கமாக மோதியதில் சின்னப்பா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சின்னப்பாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் -லாரி மோதல்: வெல்டா் உயிரிழப்பு

லாரி - இருசக்கர வாகனம் மோதல் தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


