பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:45 pm

கந்தா்வகோட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள நரங்கியன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமன் தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பா் பாப்படையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேலன் மகன் சின்னப்பா (65) ஆகிய இருவரும் கந்தா்வகோட்டை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் துரை மாணிக்கம் (50) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பின்பக்கமாக மோதியதில் சின்னப்பா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சின்னப்பாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.