ஏப். 6 உள்ளூா் விடுமுறையின்போது வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.









