தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் தலைவர், துணைத் தலைவர் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சை நகரில் கரந்தை திராவிடன் கூட்டுறவு நகர வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி, சண்முகா நகர் கூட்டுறவு கட்டட சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழக அலுவலர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் அதிமுக தொகுதிச் செயலர் துரை. திருஞானம், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் ஏ.ஜி. தங்கப்பன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், மாவட்ட மாணவரணி செயலர் ஆர். காந்தி, மாவட்ட இளைஞரணி செயலர் ஜயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
