லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அய்யம்பேட்டை காவல் சரகம், உள்ளிக்கடை கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (55). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் அய்யம்பேட்டை கடைவீதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

அய்யம்பேட்டை- கணபதியக்ரஹாரம் பிரதான சாலையில், குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே ஜல்லி பாரம் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த கணேசன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com