அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அய்யம்பேட்டை காவல் சரகம், உள்ளிக்கடை கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (55). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் அய்யம்பேட்டை கடைவீதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

அய்யம்பேட்டை- கணபதியக்ரஹாரம் பிரதான சாலையில், குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே ஜல்லி பாரம் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த கணேசன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.