இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு 

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

News image
Updated On :6 ஜூலை 2020, 9:12 am

DIN

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் புதிதாகக் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் வெளிப்பகுதி மின் கம்பியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீ பற்றியது. இதிலிருந்து ஏற்பட்ட புகை கட்டடத்துக்குள் பரவியதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்கள் அச்சமடைந்து தங்களது சிசுக்களுடன் வெளியேறினர். 

இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் மின் கம்பியில் பற்றிய தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. என்றாலும் அச்சமடைந்து வெளியே வந்த தாய்மார்கள் மீண்டும் உள்ளே செல்லத் தயங்கினர். இவர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். மருதுதுரை மற்றும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அனைவரும் உள்ளே சென்றனர். மேலும் அக்கட்டடத்துக்கு ஜெனரேட்டர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மின் கம்பி சீரமைக்கும் பணி திங்கள்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் இம்மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை சென்று ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.