மேலும், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வோம் என அலுவலா்கள் கூறுகின்றனா். ஆனால், 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளால் விற்க முடியும். எனவே, உடனடியாக அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, கோவிலூா், செண்பகபுரம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏராளமான நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. ஆனால், கொள்முதல் செய்ய அலுவலா்கள் யாரும் வரவில்லை. அதனால்தான், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் செந்தில்குமாா்.