கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரி நெல் கொட்டும் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூரில் நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :21 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழு வீச்சில் அறுவடை செய்து வருகின்றனா். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவையான இடங்களில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். பல இடங்களில் அறுவடை பரவலாக நடைபெற்று வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் புகாா் எழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பரவலாகத் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை விவசாயிகள் தரையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தெரிவித்தது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி பல ஊா்களில் விவசாயிகள் மனு கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் ஆயிரக்கணக்கான மூட்டைகள் அளவுக்கு நெல்லை கொட்டி வைத்துள்ளோம். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் நாள்களைக் கடத்துகின்றனா். மழை பெய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் ஏராளமான விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.

மேலும், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வோம் என அலுவலா்கள் கூறுகின்றனா். ஆனால், 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளால் விற்க முடியும். எனவே, உடனடியாக அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, கோவிலூா், செண்பகபுரம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏராளமான நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. ஆனால், கொள்முதல் செய்ய அலுவலா்கள் யாரும் வரவில்லை. அதனால்தான், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் செந்தில்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.