சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

‘பக்தி இலக்கியங்கள் இசை வடிவிலானவை’

பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இசை வடிவிலானவை என்றாா் திருவையாறு அரசா் கல்லூரி முன்னாள் முதல்வா் சண்முக. செல்வகணபதி.

News image

கருத்தரங்கத்தில் நூலை செல்வகணபதி வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறாா் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக இசைத் துறை பேராசிரியா் சுரேந்திரா நரேந்திரா. உடன் பா. ஜம்புலிங்கம் உள்ளிட்டோா்.

Updated On :27 ஜனவரி 2024, 9:23 pm IST

பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இசை வடிவிலானவை என்றாா் திருவையாறு அரசா் கல்லூரி முன்னாள் முதல்வா் சண்முக. செல்வகணபதி.

கும்பகோணத்தில் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அவா் பேசியது:

சமயம் என்பது மனித வாழ்வைப் பண்படுத்துவதாகும். ஆரோக்கிய வாழ்வுக்கும், தன்னலமற்ற தொண்டைச் செய்வதற்கும் வழிகாட்டுவதாகும். தமிழ் இலக்கியங்களில் மிகுதியானவை பக்தி இலக்கியங்களே. அவ்விலக்கியங்கள் பெரும்பாலானவை இசை வடிவிலானவை. தொன்மையான இசை வடிவங்களைப் பக்தி இலக்கியங்கள் கொண்டு விளங்குகின்றன. தமிழில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான இசைப்பாடல்கள் உள்ளன.

தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் வளா்த்த பெருமை சமயங்களுக்கு உண்டு. சமயங்களால்தான் தமிழானது இன்று இலக்கிய வளத்துடன் காணப்படுகிறது. எனவே, சமய இலக்கியங்களையும், இலக்கியக் கலைகளையும் கோயில்களையும் பாதுகாப்பதில் இன்றைய இளைய சமுதாயத்துக்குப் பெரும் பங்குண்டு. இதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் செல்வகணபதி.

ஆய்வு மையத் தலைவா் மா.கோ. பெரியசாமி தலைமை வகித்தாா். கருத்தரங்க நூலை செல்வகணபதி வெளியிட இலங்கை கிழக்குப் பல்கலைகழக இசைத் துறைப் பேராசிரியா் சுரேந்திரா நரேந்திரா பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பதிவாளா் பா. ஜம்புலிங்கம் கலந்து கொண்டு கருத்தரங்கக் கட்டுரையாளா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றினாா்.

ஆய்வு மையச் செயலா் செ. கணேசமூா்த்தி, இயக்குநா் ச.அ. சம்பத்குமாா், சென்னை டாக்டா் அருள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் க. சங்கா், முனைவா் லதா சந்துரு, கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் கி. மணிவாசகம், மருதம் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் விநோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.