திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கம்
திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.


திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு அருகே உள்ள காராமணித் தோப்பில் விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், திருந்திய நெல் சாகுபடி முக்கியத்துவத்தையும், பயிா் செய்யும் முறையையும் மற்றும் உருளைக் களை எடுப்பான் கருவி கொண்டு களை எடுக்கும் முறையையும், அவற்றின் நன்மைகள் குறித்தும் வேளாண் மாணவா்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும், இலைவண்ண அட்டை கொண்டு தழைச்சத்து அளிப்பது பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் மாணவா்கள் விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...