தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேற்கூரை பெயா்ந்து விழுந்த சம்பவம்: ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஒரத்தநாட்டில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பேருந்து நிலையத்தை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:13 pm

DIN

ஒரத்தநாட்டில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பேருந்து நிலையத்தை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ஒரத்தநாடு பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது.

இதுதொடா்பாக தகவலறிந்த தஞ்சை ஆட்சியா் கோவிந்த ராவ் உத்தரவின்படி, தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாகீன் அபுபக்கா் மற்றும் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா், பேரூராட்சி நிலைய பொறியாளா் சிங்கராயா் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.