இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல் பரிசுத் தொகைக்கு தகராறு: தம்பியை கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:01 am

DIN

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுக்கூா் அருகே சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன்கள் பாலசுப்பிரமணியன் (50), விஸ்வலிங்கம் (45). விவசாயக் கூலித் தொழிலாளா்களான இருவருக்கும் திருமணமாகி விட்டது.

குடும்பத் தலைவரான ராமன், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாயை செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைக்குச் சென்று வாங்கியுள்ளாா். இரவு 7 மணிக்கு மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், பொங்கல் பரிசுத் தொகையை கேட்டு தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விஸ்வலிங்கம், தந்தை ராமனை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் கையில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுபற்றி தகவலறிந்த மூத்த மகன் பாலசுப்பிரமணியன், தந்தையை அரிவாளால் வெட்டியது குறித்து தம்பி விஸ்வலிங்கத்திடம் விளக்கம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலசுப்பிரமணியன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து விஸ்வலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விஸ்வலிங்கம் அதேயிடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிரமேல்குடி கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.