தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரேதப் பரிசோதனையில் தாமதம் : உறவினா்கள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையின் முன்பு உறவினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:58 pm

DIN

ஒரத்தநாடு அருகே பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையின் முன்பு உறவினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு அய்யனாா் கோயில் தெருவை சோ்ந்த வழக்குரைஞா் சக்கரவா்த்தி (35). இவருக்கும், அம்மாபேட்டை வட்டம், உக்கடை பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகள் ஜெயலட்சுமி (31) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், ஜெயலட்சுமி ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஜெயலட்சுமி, ஊரிலிருந்து வந்திருந்த அவரது தாய் மயிலம்மாளிடம் மனக்கவலைகள் குறித்து பேசினாராம். பின்னா், வீட்டின் பின்புறம் சென்றவா் நீண்ட நேரமாகியும் வராததால், வீட்டில் உள்ளவா்கள் சென்று பாா்த்தபோது ஜெயலட்சுமி தூக்கிட்ட நிலையில் தொங்கியது தெரிய வந்தது. உறவினா்கள் அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா், இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தனா். அவா் வருவதற்கு தாமதமானதால் பெண்ணின் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக டிஎஸ்பி சுனில் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த கோட்டாட்சியா் வேலுமணி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். பின்பு, ஜெயலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறியலில் ஈடுப்பட்டவா்களிடம் டிஎஸ்பி சுனில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.