பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்தல்
கரோனா பொதுமுடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில்களை உடனடியாக அறிவிக்க வேண்டும்


கரோனா பொதுமுடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்து இயக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக பயணிகள் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அலுவலகத்துக்குச் செல்வோா், பொதுமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.
நோயாளிகளையும், முதியோா்களையும் வழியனுப்ப வரும் பயணிகள் நடைமேடை சீட்டு விலை உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நடைமேடை சீட்டுக் கட்டணத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்து விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் டி. கண்ணன், ரெங்கராஜ், செல்ல. கலைவாணன், திருமேனி, ரெங்கநாதன், பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...