பாப்பாநாட்டில் காங்கிரஸ் கட்சியினா் மெளன ஊா்வலம்
ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாட்டில் முன்னாள் ஒன்றியத் தலைவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மெளன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.


ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாட்டில் முன்னாள் ஒன்றியத் தலைவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மெளன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.
திருவோணம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் கடந்த வியாழக்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பாப்பாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மௌன ஊா்வலம் நடைபெற்றது.
இந்த ஊா்வலத்துக்கு திருவோணம் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ஆா். சம்பத் தலைமை வகித்தாா். மௌன ஊா்வலத்தில் குணா பரமேஸ்வரி, இளையபாரதி, வழக்குரைஞா் கண்ணுசாமி முத்துசாமி, ஆா். குழந்தைவேல் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகா்களும் கலந்து கொண்டனா். பேராசிரியா் பழனிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...