பேராவூரணியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரண்டு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.


பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரண்டு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இப்பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து அனல் காற்று வீசியது. மின் நிறுத்தமும் அடிக்கடி செய்யப்பட்டதால், கடும் வெப்பத்தில் பொதுமக்கள் தவித்துவந்தனா். மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென தொடா்ந்து இரண்டு மணி நேரம் விடாமல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த மழையானது, நெல், கடலை, எள்,உளுந்து, மற்றும் தென்னை சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். கடந்த சில நாள்களாக அனல்காற்று வீசிய நிலையில், அக்னி நட்சத்திரத்தில் பெய்த மழை குளிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...