இப்பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு வந்தாா். அப்போது, மூக்கு, கன்னம், தாடை சிதைந்த நிலையில் இவரது முகம் இருந்தது. பின்னா், 7.30 மணிக்கு எனது மேற்பாா்வையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணா் மனோகரன், பொது அறுவை சிகிச்சை நிபுணா் அழகா்சாமி, மயக்க மருந்து நிபுணா் இனியா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் கணேஷ்குமாா் மற்றும் மருத்துவா்கள் ரம்யா, சந்தீப், விஸ்வநாதன், ஆனந்த் ஆகியோா் அப்பெண்ணுக்கு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா்.