கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உபா சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

உபா சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:54 pm

DIN

பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை உடனே விடுதலை செய்யக் கோரியும், உபா சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் மாவட்டச் செயலா் சி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலச் செயலா் க. பாரதி தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு உழவா் இயக்க மாநிலத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் சி. சந்திரகுமாா், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டச் செயலா் வெ. ஜீவக்குமாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல்ஆப்தீன், மகஇக மாநகரச் செயலா் ராவணன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினா் என். சிவகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் ஐ. ஜாா்ஜ் தலைமை வகித்தாா். ஆா்பாட்டத்தை மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பி. பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. உறவழகன், திராவிடா் கழக மண்டலச் செயலா் க. குருசாமி, ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவா் கோ. மணிமூா்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் சாமு. தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.