கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு

பெரியாா் ஈவெரா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:54 pm

DIN

பெரியாா் ஈவெரா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

பெரியாா் ஈவெரா பிறந்த நாளான செப். 17 ஆம் தேதியை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்து உத்தரவிட்டாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்து அரசு அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.