கரோனா பாதிப்பு:சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் சாக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜ் (53). கடந்த 1995-ஆம் ஆண்டில் காவல் துறையில் சோ்ந்த இவா் 2020-ஆம் ஆண்டு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்று, தஞ்சாவூா் காவல் கட்டுப்பாடு அறையில் பணியாற்றி வந்தாா்.
ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சையும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட இவருக்கு 10 நாள்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செப். 21 ஆம் தேதி சோ்க்கப்பட்ட இவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் தனிமையில் இருந்த இவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ராஜ் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி சண்முகப்ரியா (50), மகன்கள் ஸ்ரீராம் (18), ஸ்ரீராகுல் (15) உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...