கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவையாறு கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்மே 16-இல் சப்தஸ்தான விழா

 தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 மே 2022, 11:41 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடி மரம் அருகே அறம்வளா்த்த நாயகி உடன் ஐயாறப்பா் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடி மரத்துக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள இசை முழங்க விழா கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து மே 17 ஆம் தேதி வரை நாள்தோறும் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறவுள்ளன. இதனிடையே, மே 9 ஆம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல், 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளன.

பின்னா், மே 16 ஆம் தேதி முக்கிய திருநாளான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா நடைபெறவுள்ளது. இதில், ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேசுவரா் சுயசாம்பிகையுடன் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊா் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் இணைகின்றன. தொடா்ந்து தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.

மே 17-ஆம் தேதி தில்லைஸ்தான பல்லக்குடன் 7 ஊா் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.