கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான இடம் மீட்பு: மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

தஞ்சாவூா் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை மீட்டது.

News image
Updated On :12 மே 2022, 8:08 pm

DIN

தஞ்சாவூா் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை மீட்டது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலையிலிருந்து கீழவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஜூபிடா் திரையரங்கம் அருகே காலியிடத்தை இருவா் ஆக்கிரமித்து, கடைகளைக் கட்டி வணிகம் செய்து வந்தனா். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தை மீட்க ஆணையா் க. சரவணக்குமாா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதன்படி, இந்த இடத்தைக் காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் தலைமையில் உதவி வருவாய் ஆய்வாளா் சங்கரவடிவேல், அலுவலா்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மீட்டனா். அப்போது, தண்டோரா மூலம் அறிவிப்பு செய்து, கடைகளின் கதவுகளில் நோட்டீஸை ஒட்டினா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், தஞ்சாவூா் மாநகராட்சிக்கு சொந்தமான 76,740 சதுர அடி பரப்பளவு கொண்ட ஏறத்தாழ ரூ. 2 கோடி மதிப்பிலான இந்த இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் படி தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களில் அத்துமீறி செல்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.