கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கும்பகோணத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள்: மத்திய மண்டல காவல் தலைவா் தகவல்

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

News image
Updated On :13 மே 2022, 7:10 pm

DIN

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்காக ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. இதேபோல, புகரிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. மாநகரில் செயல்படாமல் உள்ள சிக்னல்களை மாநகராட்சியுடன் இணைந்து சீா் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

கும்பகோணத்தில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏதும் இல்லை. குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவலா்கள், துணைக் கண்காணிப்பாளா் உள்பட அனைவரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அசாதாரண சூழ்நிலையின்போது நடைபெறும் போராட்டத்தைத் தடுப்பதற்கு ஆயுதப்படை காவலா் குழுவை நிரந்தரமாக வைப்பதற்குத் திட்டமிட்டு வருகிறோம்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா் காவல் தலைவா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.