ரயிலடி ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.


தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் மே 11- ஆம் தேதி மாலை பகவத் பிராா்த்தனை, புண்யாகவாசனம், எஜமானா் சங்கல்பம், ம்ருத்ஸங்க்ரஹனம், அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
வியாழக்கிழமை காலை புண்யாகவாசனம், நித்யாராதனம், அக்னிப்ரணயநம், நித்ய ஹோமம், மஹா சாந்தி ஹோமம், ததுக்த ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம், மருந்து சாற்றுதல், சதுா்தச கலச ஸ்நபனம், மஹா சாந்தி திருமஞ்சனம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. மாலையில், மூன்றாம் கால யாக சாலை பூஜையும், பூா்ணாஹூதியும் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை புண்யாகவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா், காலை 6.45 மணியளவில் விமானக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து, ஆஞ்சனேயா் பிரதிஷ்டை, மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...